இது என்ன மாதிரி கதை ? பின், முன் அல்லது மேஜிகல்.. இல்லே எனக்கு சரியா புரியலையா ?
----------------------------------------------------------------
நான் எப்பவுமே ரிஸ்க் எடுக்க மாட்டேன். நான் என்னப்பத்தி தம்பட்டம் அடிக்கறேன்னு நீங்க நெனக்கலேன்னா நான் சில விஷயங்கள சொல்றேன்.
சரி சரி. வேண்டாம். இப்படிதான் ஒரு தடவ சில புத்தகங்கள பத்தி பேசி, எனக்கு வீண் தம்பட்டம் அடிக்கரவன்னு கேட்ட பேர் வந்தது.
எந்த விஷயம்னாலும், ரிஸ்க் ன்னா என்ன ன்னு தெரிஞ்சு, தேவை இல்லாத ரிஸ்க் எதையும் நான் எடுக்கறது இல்லங்கறத மட்டும் நீங்க இப்ப புரிஞ்சுகிட்டா போதும்.
நான் வழக்கமா தண்ணியடிப்பேன். வீட்டுலதான். என் மனைவிக்குத் தெரியாது. என்ன ஆச்சரியமா இருக்கா? அதுதாங்க ரங்கண்ணா.
சரி. வீடு பக்கத்துல வந்திருச்சு. அப்புறம் பேசலாம்.
"வாங்க என்ன இன்னக்கு லேட்?"
"ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருந்ததும்மா"
"மொகத்த கழுவிட்டு வாங்க சப்பாத்தி பண்ணியிருக்கேன் உருளைக்கிழங்கு குருமாதான் பாக்கி "